இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பிரதமர் பேசி வரும் நிலையில் இன்று பிளாஸ்டிக் பைகள் குறித்த விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார்