ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட் சமூகத்தினரை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மீண்டும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தற்போது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சய் சர்மா (40) என்பவர் தன்னுடைய மனைவியுடன் சந்தைக்கு  சென்றுள்ளார்.

இவரை நேற்று தீவிரவாதிகள் வழிமறித்து திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு இருந்து தப்பி ஓடினர். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரவாதிகளை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தால் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.