தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தங்கள் மதிப்பெண்களை மறு ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் மறு கூட்டல் கோரி மே 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு விடைத்தாள் பெறுவதற்கான கட்டணம் 275 எனவும், மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு 350 ரூபாயும், பிற பாடங்களுக்கு 205 ரூபாய் என்ற வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு தேர்வு எழுதிய மையங்கள் அல்லது தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகலாம் எனவும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.