தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் வேதியியல் வினாத்தாளில் 33வது கேள்வியில் நிறைவடைய என்ற வார்த்தைக்கு பதில் நிறை உடைய என தவறாக அச்சிடப்பட்டிருந்தது.

அதனைப் புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் பதில் எழுத தடுமாறினர். இதனை பலரும் சுட்டிக்காட்டிய நிலையில் வேதியியல் பாடத்தில் தவறாக அச்சிடப்பட்ட வினா எண் 33க்கு மாணவர்கள் பதில் எழுத முயற்சித்து இருந்தால் அவர்களுக்கு முழுமையாக மூன்று மதிப்பெண் வழங்கும் படி விடை திருத்தும் ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு துறை இயக்குனராக முத்தரவிட்டுள்ளது.