தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய துணைத் தேர்வு விடைத்தாள் நகலை ஆகஸ்ட் 14ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மறு கூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காலை 11 மணியிலிருந்து 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மறுக்கூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரடியாக அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.