திருவனந்தபுரத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை இரவு 7.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் தற்போது ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருமகமாக சென்னை எழும்பூரில் இருந்து வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் ரயில் சேவையும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பிற்பகல் 1.30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் எனவும் மறு மார்க்கமாக இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி பிற்பகல் 4.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு காட்சிகூட சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.