பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான மார்க்செட்டி எஸ்.எஃப் 260 ரக விமானம் பிலார் நகரிலிருந்து வழக்கமான பயிற்சிக்காக சென்றது. அப்போது விமானத்தில் இரண்டு பயணிகள் இருந்தனர். பிலார் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானம் திடீரென  கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்திற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் கூறியுள்ளது.