தமிழக பாஜகவின் பாதயாத்திரை கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை தொடங்கியுள்ளார். இந்தப் பாதை யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில் இது குறித்து பேசி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக ஆட்சிக்கால பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். திமுக மாபெரும் பேரியக்கம், தகரத்தை தங்கத்துடன் ஒப்பிட வேண்டாம். எப்படிப்பட்ட ஜாம்பவான்கள் வந்தாலும் தோல்வியை பரிசாக தரக்கூடிய இயக்கம் திமுக என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.