தூத்துக்குடி மாவட்டத்தில் சமுத்திரா குடும்ப உணவகம் என்ற பிரபலமான தனியார் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இந்த உணவகத்துக்கு தூத்துக்குடியில் மட்டும் சுமார் நான்குக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. இதன் கிளை ஒன்று ஜார்ஜ் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஹோட்டல் ஊழியர்கள் வெளியில் சிக்கனை வேக வைத்து விட்டு சென்றுள்ளனர். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாததால் அவ்வழியே சென்ற நாய் ஒன்று ஹோட்டலில் வேக வைத்துக் கொண்டிருந்த சிக்கனை சாப்பிட்டுள்ளது.

இந்த காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரல் ஆனதால் உணவகத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இதன் காரணமாக மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஹோட்டலுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.