விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்ன மூப்பன்பட்டியில் வசித்து வரும் சின்ன வைரவன்- ரோகினி தம்பதியினரின் குழந்தைகள் சுகானா(4) மற்றும் வைரலட்சுமி(7). இவர்கள் விருதுநகர் ஹவ்வா பீவி நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி மற்றும் இரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இதில் சிறுமிகள் இருவருக்கும் யோகா செய்வதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.

இதனால் கடந்த ஒரு ஆண்டாக ஸ்ரீ நாகா யோகா சென்டரில் திவ்யபிரபா மாஸ்டரிடம் சிறுமிகள் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சாத்தூர் அருகே உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் சிறுமி சுகானா 120 முட்டை மேல் உட்கார்ந்து தொடர்ந்து 30 நிமிடம் அனுமனாசணம் செய்துள்ளார்.

அதோடு சிறுமி வைர லட்சுமி 30 முட்டை மேல் உட்கார்ந்து 2 கைகளிலும் தண்ணீர் டம்ளரை பிடித்துக் கொண்டு விபத்த பட்ஜி மோத்தாசனா யோகாவை தொடர்ந்து 30 நிமிடம் செய்து காண்பித்தார். இவ்வாறு முட்டை மேல் உட்கார்ந்து யோகாசனம் செய்து அசத்திய சிறுமிகள் உலக சாதனை படைத்து, நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்..