நீலகிரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டமானது குன்னூர் வெலிங்டன் தனியார் அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக-வின்சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ஈரோடு கிழக்கு தேர்தலை பொறுத்தவரையிலும் அ.தி.மு.க இபிஎஸ், ஜி.கே. வாசனை சந்தித்து ஆதரவு கேட்டுவிட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி பொறுத்தவரையிலும் மாநில தலைவர் அண்ணாமலை என்ன முடிவு எடுக்கறாரோ அதனை பொருத்து தான். நீலகிரி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் ஒருமுறை வெற்றி பெற்று உள்ளோம். கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும் போது கண்டிப்பாக தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அபரீதமான வளர்ச்சி அடைந்துள்ளது. அதனை நாங்கள் சொல்வதை விட தி.மு.க அமைச்சர் துரைமுருகனே கூறி இருக்கிறார். எங்களை பொறுத்தவரை நாங்களும் ஒரு கனிசமான வளர்ச்சி பெற்று உள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர் தெரிவித்தார்..