சேலம் அருகே ஆதார் எண் பதிவு செய்ய வந்துள்ளதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதி பெரிய கிணறு தெருவில் லட்சுமி என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆதார் எண் பதிவு செய்ய வந்துள்ளதாகவும் ஆதார் எண் பதிவு செய்தால் மாதம் 500 ரூபாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய மூதாட்டி லக்ஷ்மி ஆதார் மற்றும் புகைப்படத்தை எடுத்து வர வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் வீட்டிற்குள் நுழைந்து ஒரு சவரன் தங்கம் மற்றும் 20,000 பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அந்த மூதாட்டி லக்ஷ்மி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.