உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கூகுள், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று 10,000 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் பணி நீக்க நடவடிக்கை குறித்த தகவல்  ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.