பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் ராஜ் குந்த்ரா மீதான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இதனால் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா செட்டிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதன்படி 97.79 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை மற்றும் புனேவில் உள்ள அவர்களின் வீடுகள் உட்பட பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.