கேரள மாநிலத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பிரபல நடிகை ஒருவர் கடத்தி தாக்கப்பட்டார். இவ்வழக்கு குறித்து நடிகர் திலீப், பல்சர் சுனீல் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பற்றி 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. மீதி 12 பேரிடம் விசாரணை நடைபெறாமல் இருந்தது. அதன்பின் 2 ஆம் கட்ட குறுக்கு விசாரணைக்கு 20 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதில் திலீப்பின் முன்னாள் மனைவி மற்றும் நடிகையான மஞ்சுவாரியர் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் உட்பட 20 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி 2ம் கட்ட விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார் மஞ்சுவாரியர். இவர் உட்பட 4 பேரிடம் தற்போது விசாரணை நடைபெற்று உள்ளது. இந்த வழக்கை இன்னும் 6 மாதத்திற்குள் முடித்துவிட கேரள நீதிமன்றமானது உத்தரவு பிறப்பித்துள்ளது.