பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் சௌந்தர்யா ஜெகதீஷ் உயிரிழந்துள்ளார். பெங்களூர் மகாலஷ்மி லே-அவுட்டில் உள்ள வீட்டில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.. இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகும் நிலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ராம் லீலா, சினேகிதரு போன்ற திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். நிதி நெருக்கடியால் சௌந்தர்யா ஜெகதீஷ் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இவரின் தற்கொலைக்கான காரணம் பின்னரே உறுதியாகும்.