தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடாகாவில் பந்த் போராட்டம் நடந்து முடிந்துள்ளது.  இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி பிரச்சனை எழுந்துள்ள நிலையில் கன்னட நடிகர் ஒருவர் பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் எழுதியுள்ள கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காவிரி நதிநீர் பிரச்சனையில் நீதி கேட்டு கன்னட நடிகர் பிரேம் நெனபிரவி இந்த கடிதத்தை எழுதியுள்ளார். காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு நீதி கேட்டு அவர் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.