ஆளுநர் மாளிகையில் நேற்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் ஆளுநர் மாளிகையில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தியாகிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்தது, மாளிகைக்கே பெருமை. அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் இருப்பதை உறுதி செய்து ஆவணங்களை சேகரித்துள்ளோம். ஆளுநர் மாளிகை சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான வீடு. உங்களுக்காக மாளிகை கதவை எப்போதும் திறந்து இருக்கும் என்று ஆளுநர் பேசினார்.