ஹைதராபாத்தில் ஆசிரியர் தாக்கியதில் யுகேஜி படிக்கும் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படிக்கும் மாணவன் ஹேமந்த் என்பவர் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் பலகையால் அவனது தலையில் அடித்துள்ளார்.

இதனால் மாணவனின் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் வகுப்பறையில் மயங்கி விழுந்தான். உடனே சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.