கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மாயமான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப்பிற்கு புலம்பெயர்ந்த குடும்பம் கான்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி பெற்றோர்கள் வேலை முடிந்து வீடு திரும்பிய போது மூன்று பெண் குழந்தைகளையும் காணவில்லை.

இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்யும் போது அந்த மூன்று சிறுமிகளின் உடற்பாகங்கள் ஒரு ட்ரங்க் பெட்டியில் கண்டறியப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.