சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சீசன் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்படும் எனவும் மறுநாள் முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 11ஆம் தேதி காணிக்கையாக கிடைத்த நாணயங்களை எண்ணுவதற்கு தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.