சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சீசன் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்படும் எனவும் மறுநாள் முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 11ஆம் தேதி காணிக்கையாக கிடைத்த நாணயங்களை எண்ணுவதற்கு தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!
Related Posts
உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read moreதொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read more