உபியை தொடர்ந்து அரியானாவிலும் மாணவர்கள் பிட் அடித்து தேர்வு எழுதுவதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக ஆம்ஆத்மியின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் அரசு தேர்வு நடக்கும் பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறியும், அதனை சுற்றியும் நிற்கும் பலர், பள்ளிக்குள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. அதில் ஆம்ஆத்மி சார்பில்,”பாஜக ஆட்சியில் கல்வி முறை நகைச்சுவையாக மாறி வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.