விஜய் தொலைக்காட்சியில் ஆறு சீசன் கடைந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் சீசன் 7. இந்த சீசனில் பிசிகல் டாஸ்க் மிக விரைவாகவே சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் போட்டியாளர்கள் விளையாடிய விதம் விஜய் மற்றும் பிரதீப் இடையே ஏற்பட்ட மோதல் ஆகியவை ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த நிலையில் வைல்டு கார்ட் என்று இருவர் உள்ளே வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அர்ச்சனாவும் பிரபல பாடகர் கானா பாலாவும் போட்டியாளர்களாக உள்ளே வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையானது தானா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.