நவராத்திரியின் போது ஒன்பது நாட்கள் தேவியின் 9 அவதாரங்கள் பூஜிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் நவராத்திரி என்றாலே தமிழகத்தில் உள்ள வீடுகள் மற்றும் கோயில்களில் 9 நாட்கள் கொலு வைத்து சிறப்பாக கொண்டாடுவார்கள். அதன்படி இன்று நவராத்திரியில் ஏழாவது நாள். இன்றைய தினம் காலையில் 9:15 மணி முதல் 10 15 மணிக்குள் அம்மனுக்கு நெய்வேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும்.

அதேபோன்று மாலையில் 4:45 மணி முதல் 5:45 மணிக்குள் இன்றைய தின நவராத்திரி பூஜையை செய்து முடிக்கலாம். எமகண்டம், ராகு காலம் போன்ற நேரத்தில் பூஜை செய்யக்கூடாது இந்த ஏழாம் நாளில் கலைமகளின் அம்சமாய் விளங்கும் தேவியை மனம் குளிர பூஜித்து வணங்குவதனால் எதிரிகளின் தொல்லை நீங்கி நன்மை நடக்கும் என்பது நம்பிக்கை.