பாலியல் புகார் குறித்து கலாஷெத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் அமைத்த மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளார். மாணவிகள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்கள் யாரிடம் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும். எனவே எவ்வித அச்சமும் இல்லாமல் மாணவிகள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்று விசாரணை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.