பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீராங்கனை நேத்ரா படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவர் 2-வது முறையாக ஒலிம்பிக் படகு போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த தகவலை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்து வெற்றி வாகை சூட அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நேத்ரா குமணன் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற நிலையில் தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இரு ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற்ற ஒரே வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.