பொதுவாக பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வது வழக்கம். பாம்பை பார்த்தால் யாராக இருந்தாலும் பயப்படுவார்கள். காட்டுப்பகுதிகள், மனித நடமாட்டம் குறைவான இடங்களில் அதிக அளவில் தென்பட்டாலும் தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் நுழைவதும் மனிதர்கள் அதை கண்டு பயப்படுவதும் நாம் பார்த்து வருகிறோம்.  அந்தவகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் மூத்த கிரிகெட் வீரரான கிளென் மெகாராத் வீட்டிற்குள் வந்த பாம்பை வீடு துடைக்கும் மாப்பை வைத்து அப்புறப்படுத்தியுள்ளார்.

இதை அவருடைய மனைவி வீடியோவாக எடுத்துள்ளார். எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஆபத்தான முறையில் அவர் பாம்பை கையாண்ட விதம் குறித்து அச்சமடைந்துள்ளனர். அதாவது இரண்டு மூன்று முறை அந்த பாம்பை மாப் வைத்து  தூக்க முயன்ற போது கோபத்தில் பாம்பு அவரை தாக்கம் முற்பட்டது அச்சத்தை  ஏற்படுத்தியது. இருந்தாலும் அவர் பொறுமையாகவும் பாம்பை தூக்கி வெளியே கொண்டு சென்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Glenn McGrath (@glennmcgrath11)