சமூகவலைதளங்களில் பாம்பின் அதிர்ச்சி வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு நபர் மரத்தடியில் அமர்ந்திருப்பதையும், நாகப்பாம்பு அவரை சிறைபிடித்து வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. உண்மையில் அந்த நாகப் பாம்பு எப்படி அந்நபரை பிடித்தது என தெரியவில்லை. பயத்தால் அந்த நபரின் நிலை மோசமானது.

துளியும் அசையாமல் அந்நபர் அப்படியே அங்கு அமர்ந்து இருந்தார். இதுகுறித்த காட்சியை யாரோ ஒருவர் கேமராவில் படம்பிடித்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.