பொதுவாக அனைவருக்கும் தெரிந்த சில விஷயங்கள் உண்மையா இல்லையா என்று குழப்பம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படி அடிப்படை விடை தெரியாத விஷயத்தில் ஒன்றுதான் பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்தும். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் .தமிழ் சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் பாம்புகள் பழிவாங்குவது போன்று காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அறிவியல் அடிப்படையில் பாம்புகள் யாரையும் பழிவாங்குவது இல்லை. வேண்டும் என்று தேடுவதுமில்லை.

உண்மையில் மேல் பாம்புகள் மிகவும் சாதுவானது. மனிதர்களை கண்டு பயந்து பயந்து ஒதுங்கிப் போகவே விரும்பும் . அதை போகும் பாதையை மறைப்பது அதனை தாக்குவது போன்ற செயல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே பாம்பு சில சமயங்களில் மனிதர்களை  கடிக்கிறது. தனது துணையை யாராவது கொன்று விட்டால் இன்னொரு பாம்பு பழிவாங்கும் என்ற கருத்து முந்தைய காலத்தில் இருந்து நிலவி வருகிறது. இந்த கருத்து நிலவினாலும் உண்மையில் பாம்புகளின் பிறப்பு உறுப்புகளுக்கு அருகில் இருக்கும் சுரப்பி அவற்றை கொலல்லும் போது பலமுறை வெடிக்கிறது .

அதனால் ஒரு அற்புதமான வாசனை வெளியாகிறது. இந்த வாசனையை மற்ற பாம்புகளை ஈர்க்கும் தன்மை கொண்டது . அதன் காரணமாக ஒரு பாம்பு இறந்த பிறகு பெண் பாம்புகள் அந்த இடத்தில் அடிக்கடி உலாவுகின்றன. இந்த சுரப்பிலிருந்து வெளிப்படும் வாசனை பெண் பாம்புகளை அதிகமாக பாதிக்கும். இதனால் அதை கொன்றவரை பழி வாங்குவதற்காக மற்ற பாம்பு வந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.  அது மாத்திரம் இன்றி பாம்புகளால் எதையும் நீண்ட நேரம் நினைவில் வைத்திருக்க முடியாது. ஏனை உயிரினங்களுடன் ஒப்பிடும்போது பாம்புகளுக்கு நினைவாற்றல் மிகவும் குறைவு. எனவே பாம்புகள் பழிவாங்கும் என்பது அறிவியல் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதை அதில் எந்தவித உண்மையும் ஆதாரமும் இல்லை.