கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் தரன்டகுக் என்ற பகுதியை சேர்ந்தவர் மனோஜ். 36 வயதாகும் இவர் பாணி பூரி விற்று மாதம் 5 லட்சம் சம்பாதித்து இளைஞர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக மங்களூரில் மாநகர பேருந்து ஓட்டுனராக பணியாற்றியவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். வியாபாரம் செய்யும் ஆசை வந்ததும் வீட்டிலேயே பானி பூரி செய்து சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தார். தேவை அதிகரித்ததால் மனோஜ் முழு நேர வேலையாக தனது வீட்டில் சிறிய தயாரிப்பு பிரிவையும் தொடங்கியுள்ளார். தினமும் குறைந்தது 40 கிலோ பாணி பூரி அவர் தயாரிக்கின்றார்.