பாட்னாவில் இருந்து பூனேவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் விமானம் பாட்னா விமான நிலையத்திற்கு திரும்பியது. அதற்கு காரணம் விமானியின் பாட்டி இறந்து விட்டார்.

துக்க செய்தியை தாங்க முடியாமல் கவன சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீண்டும் விமானத்தை தரையிறக்கியுள்ளார். இதனை அடுத்து 1:25 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் மாற்று விமானி மூலமாக நான்கு 4:41 மணிக்கு புறப்பட்டது.