பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஈரானுக்கு பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டது. அதன்படி ஈரான் நாட்டின் சப்பார் பகுதியை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் டெய்லி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஈரானை சகோதர நாடு என்று கூறி வந்த நிலையில் தற்போது இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த தாக்குதல் சம்பவங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.