தாய்லாந்து நாட்டில் உள்ள முவாங் மாவட்டத்தில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதில் 12 பெண்கள் 8 ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களில் 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.