AI தொழில்நுட்பத்திற்கு பிறகு பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இதில் கூகுளும் அடங்கும். பிரபல நிறுவனமான google கடந்த வருடத்தில் மட்டும் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதேபோன்று இந்த வருடத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் ஆயிரம் ஊழியர்கள் google நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் CEO ஆன சுந்தர் பிச்சை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த வருடமும் பணி நீக்கம் தொடரும் என்று குறிப்பு அனுப்பியுள்ளார். இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.