தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பாஜக ஊழல் குறித்து பேச சற்றும் தகுதி இல்லாத கட்சி. நீரவ் மோடி முதல் அதானி வரையிலும் பலருக்கும் துணை போகும் கட்சி,பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை வைத்துக்கொண்டு இவர்கள் ஊழல் குற்றச்சாட்டு கூற தகுதியற்றவர்கள். திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடுவது மக்களின் ஏற்றத்தை திசை திருப்பும் செயல். பாஜகவின் ஊழல் பட்டியல் சந்தி சிரிக்கும் அளவிற்கு மக்களுக்கு தெரியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.