உத்தர பிரதேச காவல்துறை முன்னாள் டிஜிபி விஜய்குமார், அவரின் மனைவி ஆகியோர் பாஜகவில் இன்று இணைந்தனர். லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான பிரஜேஸ் பாதக் முன்னிலையில் 2 பேரும் பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து அவர்களுக்கு பாஜக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் காங்கிரஸ், சமாஜ்வாதி நிர்வாகிகள் சிலரும் பாஜகவில் இணைந்தனர்.