மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பாஜக வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அரியலூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது பெருமை அளிப்பதாக கூறினார். மேலும், திமுகவும், காங்கிரசும் சனாதன பண்பாட்டை ஒழிக்க முயற்சிப்பதாகவும், தமிழை எப்படி ஒழிப்பது, அவமானப்படுத்துவது என சிந்திப்பதாகவும் சரமாரியாக குற்றம் சாட்டினார்.