பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி (83) ஞாயிற்றுக்கிழமை காலமானார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வழுக்கி விழுந்து இறந்தார். ‘மாயா தர்பன்’, ‘தரங்’, ‘கியால் கதா’, ‘கஸ்பா’ போன்ற படங்களை இயக்கியவர். குமார் சாஹ்னி இயக்குநராக மட்டுமல்லாமல், எழுத்தாளர் மற்றும் ஆசிரியராகவும் முத்திரை பதித்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘மாயா தர்பன்’ இந்தியில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.