பழனி மலைக்கோவில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப் கார் இயக்கப்பட்டு வருகின்றது.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோஸ் கார் பிற்பகல் ஒரு மணி நேரமும் மாதத்தில் இரண்டு நாளும் வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.