சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் அனைவரும் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.