கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் அமைந்துள்ள விவேகோடையம் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவன் ஜெகன் என்பவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு தலைமை ஆசிரியரை பார்க்க சென்றவர் அவர் இல்லாததால் ஆசிரியர்கள் அறைக்கு சென்று ராமதாஸ் இருக்கிறாரா என கேட்டுள்ளார் இல்லை என்றதும் அந்த அறையிலேயே சிறிது நேரம் காத்திருந்துள்ளார்.

அப்போது தனது பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை ஜெகன் எடுத்ததும் அங்கிருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கிருந்து சில வகுப்பறைகளுக்கு சென்று துப்பாக்கி காட்டி மிரட்டி விட்டு இறுதியாக வானத்தை நோக்கி சுட்டுள்ளார் ஜெகன்.

இது குறித்து தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறையினர் பள்ளிக்கு செல்ல அங்கிருந்து ஜெகன் தப்ப முயன்றுள்ளார். ஆனாலும் அப்பகுதி மக்களின் உதவியுடன் காவல்துறையினர் ஜெகனை கைது செய்தனர். மேலும் வழக்கு பதிந்து ஜெகன் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.