புதுச்சேரி பள்ளிகளில் மாதம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாத நாளாக கடைபிடிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். அன்றைய தினம் கலை, விளையாட்டு ஆகிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வர செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.