செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மழை பாதிப்புகளை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மழை பாதிப்புக்கான உபரணங்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய புகார்களை உடனுக்குடன் கண்காணித்து அவற்றை தொடர்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்ய மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை சார்பாக எண்களும் வழங்கப்பட்டுள்ளது. எனவே மழைநீர் தேங்கி இருப்பது தொடர்பாக எண் 1077, 044 -27427412, 044 -27427412 மற்றும் வாட்ஸ்அப் நம்பர் 9444272345-க்கு புகாரளிக்கலாம்.