நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நேற்று மாலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் ஒன்றியங்கள் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர்  சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ராசிபுரம் லட்சுமி நாமகிரிப்பேட்டை மோகன் குமார் ஒன்றிய செயலாளர் வெண்ணந்தூர் ஜெகநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்து வகை விடுப்பு, இருப்பு சான்று பணி பதிவிட்டு விடுப்பு பதிவுகளுடன் வழங்க வேண்டும். மேலும் ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதேபோல் நகராட்சி பள்ளிகளுக்கு தூய்மை பணியாளர் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.