விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி எம்.சொக்கலிங்கபுரம் பகுதியில் செந்தூர்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மங்களம் எம்.புதுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் செந்தூர்பாண்டியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தூர்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.