நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் நடேசன் தலைமை தாங்கியுள்ளார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கராசு இந்த ஆர்ப்பாட்டத்தில் வரவேற்று பேசியுள்ளார். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான அகவிலைபடியுடன்  ரூ.6,780 மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.