சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை நகரில் வளர்ச்சிப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காரைக்குடியில் உள்ள சி.மெ தெருவில் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைப்பதற்கான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் ஒப்பந்ததாரர்களிடம் தரமான முறையில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின்போது நகராட்சி துணைத் தலைவருடன் நகர மன்ற உறுப்பினர் சோ.கண்ணன், தி.மு.க மாவட்ட பிரதிநிதி ஜான் கென்னடி போன்றோர் உடன் இருந்தனர்.