தமிழகத்தின் வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குறிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பு அவருக்கு எதிராக வரும் பட்சத்தில் அமைச்சர் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அவர் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழலும் ஏற்படும். இதனால் இந்த தீர்ப்பு அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.