தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ் வழியில் பயிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சற்று முன் அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழ் வழியில் பயிலாத மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாய், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.